Thursday, March 7, 2013

நீலகண்டனின் வடிவமே போற்றி


நெஞ்சத்தில் உறைந்த லிங்கமே போற்றி
நிறைவைத் தந்திடும் ஜோதியே போற்றி
எது வந்த போதிலும் காப்பாய் போற்றி
எதுவரையாகிலும் வாழ்விப்பாய் போற்றி

நித்தமும் நினைவை விட்டகலாய் போற்றி
நீலகண்டனின் வடிவமே போற்றி
பற்றற்ற நிலையைக் காட்டினாய் போற்றி
பற்றிய கொள்கையைக் காப்பாய் போற்றி

சரணங்கள் பணிந்தேன் லிங்கேஸ்வரா
சித்தமெலாம் நிறைந்தே குருவே பணிந்தேன்

சக்தி சக்திதாசன்

No comments:

Post a Comment